சீன ராணுவத்தினர் எல்லை தாண்ட முயற்சி - சீன நடவடிக்கையை முறியடித்த இந்திய வீரர்கள்

சிக்கிமில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினர் நடவடிக்கையை, இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து உள்ளனர்.
x
சிக்கிமில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினர் நடவடிக்கையை, இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து உள்ளனர்.3  நாட்களுக்கு முன்னதாக சிக்கிம் எல்லை பகுதியில், சீனா மீண்டும் அத்துமீற முயன்ற சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்கிமில் உள்ள  நகுலா பகுதியில் இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன ராணுவ வீரர்கள் எல்லை தாண்ட முயன்றுள்ளனர். அப்போது அவர்களை  இந்திய ராணுவ வீரர்கள் தடுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த  மோதலில் இருதரப்பு வீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். சீன வீரர்கள் 20 பேரும், இந்திய வீரர்கள் 4 பேரும் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன ராணுவத்தின் முயற்சி வெற்றிகரமாக தடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்