பிரதமரின் வீட்டு வசதி திட்டம் : கிராமம் - நகரம் வேறுபாட்டை குறைக்க முயற்சி பிரதமர் மோடி பேச்சு

கிராமத்திற்கும், நகரத்திற்குமான வேறுபாட்டை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டம் : கிராமம் - நகரம் வேறுபாட்டை குறைக்க முயற்சி பிரதமர் மோடி பேச்சு
x
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கான நிதியை, காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி விடுவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், குறைந்த காலகட்டத்தில், நாட்டில் உள்ள கிராமங்களின் பிம்பத்தை மாற்றி இருப்பதாகவும், ஏழைகள் தங்களது கனவு இல்லத்தை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 
மேலும், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், அனைத்து ஏழை மக்களுக்கும் வீடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, அடிப்படை வசதிகளை பெறுவதில் கிராமம் மற்றும் நகரத்திற்கு இடையிலான வேறுபாட்டை குறைக்க முயற்சி நடப்பதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்