தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி - 4 மாடவீதிகளில் வீதியுலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியான நேற்றிரவு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியான நேற்றிரவு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். 4 மாடவீதிகளில் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் வீதியுலா வந்த மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வீதிஉலா ரத்து செய்யப்பட்ட நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் திரண்டு கருட சேவையில் மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர்.
Next Story