9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் - கொலையாளிக்கு தூக்கு தண்டனை

தெலங்கானாவில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் அருகே உள்ள கோரப்பட்ட என்ற பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கடந்த மே மாதம் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டனர். உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9 பேரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்தார் சஞ்சய் என்ற இளைஞர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சஞ்சய் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணை வாரங்கல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே குற்றவாளி சஞ்சய்க்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்