தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட சிவசங்கரனின் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
x
கேரள தங்க கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்டோர் சிவசங்கரனை விசாரித்து வந்த நிலையில் கைதாக கூடும் என கருதிய அவர், முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிவசங்கரன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த மருத்துவமனைக்கு சென்ற அமலாக்கத்துறையினர் சிவசங்கரனை அழைத்து சென்று காவலில் வைத்துள்ளனர்... 

Next Story

மேலும் செய்திகள்