ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.
ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது
x
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎஸ்சி, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு கடந்த 22ம் தேதி நுழைவுத் தேர்வு நடந்தது. மொத்தம் 21 நகரங்களில் 37 மையங்களில் நடந்த தேர்வை 4 ஆயிரத்து 51 பேர் எழுதினர். கொரோனாவால் தேர்வு மையங்கள் அனைத்தும் வீடியோவில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள்  வெளியிடப்படுகிறது. முடிவுகளை ஜிப்மர் இணையத்தில் அறிந்துகொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 30ம்தேதி தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்