மும்பையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகளை வழங்கிய புதுமண தம்பதி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் மருத்துவமனைக்கு 50 படுக்கைகளை இலவசமாக வழங்கினர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் மருத்துவமனைக்கு 50 படுக்கைகளை இலவசமாக வழங்கினர். தலையணைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் வழங்கினர். வாசை பகுதியை சேர்ந்த எரிக் ஆண்டன் லோபோ மற்றும் மெர்லின் என்ற அந்த ஜோடியின் திருமணம் சர்ச்சில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு எளிமையாக நடைபெற்றது.
Next Story