மும்பை விஞ்ஞானிக்கு நோய் தொற்று உறுதி - டெல்லி ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம்​ தூய்மைப்படுத்தப்பட்டது.
மும்பை விஞ்ஞானிக்கு நோய் தொற்று உறுதி - டெல்லி ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது
x
மும்பையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்த அவருக்கு கொரோனா தொற்று ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த முதுநிலை விஞ்ஞானி மும்பையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவில் பணியாற்றி வருபவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டெல்லி தலைமை அலுவலகம் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் 2 நாட்களுக்கும் அலுவலகம் செயல்படாது என கூறப்படுகிறது. கொரோனா தொடர்பான பணியில் உள்ளவர்களை தவிர, மற்ற விஞ்ஞானிகள், பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்