பிஎஸ்4 ரக வாகனங்களை விற்கக்கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றக்கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு

பிஎஸ்4 ரக வாகனங்களை விற்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
பிஎஸ்4 ரக வாகனங்களை விற்கக்கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றக்கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
x
பிஎஸ்-4 ரக வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக் கூடாது என கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபா் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றக்கோரி ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதால், உத்தரவில் மாற்றம் செய்து கால அவகாசம் அளிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்