இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் பலி - கர்நாடகாவில் முதியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

கர்நாடாகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கல்பர்கியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் பலி - கர்நாடகாவில் முதியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு
x
இந்தியாவில் இதுவரை 60 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்பர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் உயிரிழந்ததை கர்நாடக சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது ரத்த மாதிரி முடிவுகள் தற்போது வந்துள்ளன. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட  முதல் உயிரிழப்பு இது ஆகும்.  இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்