"நித்தியானந்தா சொத்துகளை முடக்கவேண்டும்"- ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் இருந்ததால், நித்தியானந்தாவின் சொத்துகளை முடக்க ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தா சொத்துகளை முடக்கவேண்டும்- ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கு ராம்நகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 40 முறைக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்காக நித்தியானந்தா ஆஜராகாததால், அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனிடையே லெனின் கருப்பன் தொடர்ந்து வழக்கு உள்ளிட்ட 2 வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக நித்தியானந்தா ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. இதையடுத்து நித்தியானந்தாவின் சொத்துகள் மற்றும் நாடு முழுவதும் அவரின் ஆசிரமத்துக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்