டெல்லி ஷாகின் பாக் போராட்டம் தொடர்பான வழக்கு : அறிக்கையை தாக்கல் செய்த பேச்சுவார்த்தை குழு

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு, உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
டெல்லி ஷாகின் பாக் போராட்டம் தொடர்பான வழக்கு : அறிக்கையை தாக்கல் செய்த பேச்சுவார்த்தை குழு
x
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரதான சாலையை மறித்து போராட்டம் நடைபெற்று வருவதால், டெல்லியில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு நபர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது. 

இந்நிலையில், இந்த குழு, அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை, சீலிட்ட கவரில், உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. தொடர்ந்து, மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை  நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்