"சிஏஏ எதிர்ப்பு - ஜாமியா பல்கலையில் போராட்டம் தீவிரம்"

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - காயமடைந்த மாணவர் அனுமதி
சிஏஏ எதிர்ப்பு - ஜாமியா பல்கலையில் போராட்டம் தீவிரம்
x
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நடந்த பேரணியில், மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை மேலும் அதிகமாக்கியது. மர்ம நபர் சுட்டதில் ஜாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் கையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஜாமியா பல்கலை மாணவர்கள், மர்ம நபர் மீது புகார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால்  ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்