"காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை" - ரவீஷ்குமார்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை -  ரவீஷ்குமார்
x
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கஷ்மீர் விவகாரத்தில், இந்தியா விரும்பினால் சமரச பேச்சுவார்த்தை செய்ய தயார் என சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது மற்றும் நிலையானது என்று அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்