பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணி தொடக்கம் - அல்வா கிண்டி தொடங்கி வைத்த நிதியமைச்சர்

டெல்லியில் பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணி அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.
பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணி தொடக்கம் - அல்வா கிண்டி தொடங்கி வைத்த நிதியமைச்சர்
x
டெல்லியில் பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணி அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் முன்னர், அல்வா கிண்டி, அதிகாரிகளுக்கு வழங்கி தொடங்கி வைப்பது வழக்கம். அதன்படி, இன்று டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அல்வாவை கிண்டி, அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வழங்கினார். இதை தொடர்ந்து, பட்ஜெட் அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. வரும் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  



Next Story

மேலும் செய்திகள்