"மாணவர் குரலுக்கு செவி சாய்க்கும் அரசை தேர்ந்தெடுங்கள்" - ஜார்கண்ட் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி அழைப்பு

பெண்கள் மீதான தாக்குதல் தொடருவதற்கு கவலை
மாணவர் குரலுக்கு செவி சாய்க்கும் அரசை தேர்ந்தெடுங்கள் - ஜார்கண்ட் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி அழைப்பு
x
மாணவர்களின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசை தேர்ந்தெடுக்குமாறு, வாக்காளர்களுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் பாகூர் என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு விவகாரத்தில் தோல்வி அடைந்த மத்திய அரசு, இப்போது, குடியுரிமை சட்டம் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் எதிர்கொண்டுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ஏழை - எளிய மக்கள், சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என பிரியங்கா காந்தி உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்