குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.
x
* குடியுரிமைச் சட்டம் 1955-ஆம் ஆண்டில்  இயற்றப்பட்டது.

* அதில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து

* 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

* தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*  கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும், இந்திய குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த சட்டத் திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்த, இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

* இந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது. 

* அதேபோல மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கும், உதாரணமாக இலங்கைத் தமிழர்கள், மியான்மர் முஸ்லிம்கள் முதலானோருக்கு இது பொருந்தாது

Next Story

மேலும் செய்திகள்