கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் 16 தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது பெரிய நடைப் பந்தலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று மாலை, சன்னிதானத்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், பம்பையில் பக்தர்கள் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் தரிசனம் முடித்த பக்தர்கள், உடனே பம்பை திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன்னிதானம் முழுவதும் தீபத்தால் ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்றும், 
அதனைக் காண வந்துள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்