நகைப் பிரியராக காட்சி தரும் நித்தியானந்தா...

நித்தியானந்தா மீதான சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவரின் சத்சங்கம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்போருக்கு தெரியும் அவர் ஒரு நகைப் பிரியர் என்று.
நகைப் பிரியராக காட்சி தரும் நித்தியானந்தா...
x
நித்தியானந்தா மீதான சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவரின் சத்சங்கம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்போருக்கு தெரியும் அவர் ஒரு நகைப் பிரியர் என்று. விதவிதமான நகைகளை அணிந்து கொள்ளும் நித்தி, பெண்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கிறார். சர்ச்சைகள், புகார்கள் என இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் நபராக இருக்கிறார் நித்தியானந்தா. ஆனால் என்ன நடந்தாலும் கவலை கொள்ளாத அவர், சத்சங்கம் நிகழ்ச்சியில் ஆஜராகி மணிக்கணக்கில் சொற்பொழிவை நடத்தி வருகிறார். கலகலப்பான பேச்சு ஒரு பக்கம், தன் மீதான வசவுகளுக்கு விளக்கம் கொடுப்பது மறுபக்கம் என நித்தி சமீப காலமாக டிரெண்டிங்கிலும் முன்னணிக்கு வந்து அசத்தி வருகிறார். 

இதையெல்லாம் ஒரு ஓரமாக வைத்து விட்டு நித்தியானந்தாவை மட்டும் சற்று உற்றுநோக்கினால் அவர் ஒரு ஆபரண பிரியர் என்ற உண்மை புலப்படும். ஒருநாள் அணியும் நகைகளை அடுத்த நாள் அணியாத அளவிற்கு விதவிதமான நகைகளை வைத்திருக்கிறார் அவர்... தலையில் அணிந்து கொள்ளும் கிரீடமாகட்டும், ஜடாமுடியுடன் பொருந்திய பிறை நிலவாகட்டும் எல்லாவற்றிலும் தனித்துவம் பெற்றவராகவே இருக்கிறார். கழுத்தில் அணிந்து கொள்ளும் மாலைகளும், பெரிய பெரிய டாலர்களும் பார்ப்போரை பளிச்சென ஈர்க்கிறது. விரல்களில் பெரிய சைஸ் மோதிரம், கைகளில் வங்கி, மணிக்கட்டில் ருத்திராட்ச நகைகள், காதில் கம்மல் என அனைத்திலும் டிரெண்டியாக இருக்கிறார் அவர்.. 

ருத்திராட்சத்தை தங்க நகையுடன் இணைத்து அணிந்து கொள்வதில் கைதேர்ந்த நித்தி, தான் நகைகளை அணிந்து கொள்வது ஏன்? என சத்சங்கம் நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். இவர் தான் இப்படி என்றால் ஆசிரமத்தில் உள்ள சிஷ்யைகளோ அதற்கு மேல் ஜொலிக்கிறார்கள். நெற்றிச் சுட்டி தொடங்கி கழுத்தில் ஆரம், கைகளில் வளையல், கழுத்தில் நித்தி படம் பொறித்த மாலைகள் என அசத்தி வருகிறார்கள். நள்ளிரவில் எங்களை எழுப்பி நகைகளை அணிந்து கொண்டு தன்னை பற்றி புகழ்ந்து பேச வற்புறுத்துவார் என அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்திருந்த போதும், நித்தி தொடர்பான வீடியோக்கள்  அனைத்தும்  கலர் புல்லாக  காட்சி தருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் நகைகள் வைத்திருக்கிறார், சொத்துகள் ஏராளம் என ஒரு பக்கம் புகார்கள் எழுந்தாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என கூறும் விதமாக நகை பிரியராக எப்போதும் நித்தி அருள்பாலிப்பது அதிசயத்திலும் ஆச்சரியம் தான்.

Next Story

மேலும் செய்திகள்