குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்
குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தகவல் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தகவல் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 3 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரகதி மைதானத்தில் 5 நட்சத்திர விடுதி அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாரத் பாண்ட் எக்ஸ்சேன்ச் ஃபண்ட் (Bharat Bond Exchange Traded Fund) அறிமுகத்திற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Next Story