"பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை" - ஹேமமாலினி எம்.பி., வலியுறுத்தல்

பாலியல் குற்றவாளிகளை நிரந்தரமாக ஜெயிலில் அடைக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என ஹேமமாலினி எம்.பி., வலியுறுத்தினார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - ஹேமமாலினி எம்.பி., வலியுறுத்தல்
x
பாலியல் குற்றவாளிகளை நிரந்தரமாக ஜெயிலில் அடைக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என ஹேமமாலினி எம்.பி., வலியுறுத்தினார். புதுடெல்லியில்,  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைதராபாத் குற்ற சம்பவத்தை குறிப்பிட்டு அவையில் பேசியதாக கூறினார். ஒவ்வொரு நாளும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்றும், பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த பரிவும் காட்டக்கூடாது என்றும் கூறினார்.  அவர்களை நிரந்தரமாக சிறையில் அடைத்தால்தான், மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்றும் ஹேமமாலினி வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்