சித்தூர் : உயர் அழுத்த மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சார வயரில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சித்தூர் : உயர் அழுத்த மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி
x
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மின்சார வயரில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. முகிலி வாரி பள்ளி கிராமத்தில் உள்ள காலை ராமகிருஷ்ணா என்ற விவசாயியின் நிலத்தில் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், மேற்கொண்ட ஆய்வில் தும்பிக்கை மேலே உயர்த்தியபோது,  உயர் அழுத்த மின் வயர் பட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விவசாய நிலங்களில் உள்ள மின்சார வயர்களை உயரமாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்