நித்தியானந்தா மீது தொடர் புகார்கள் எதிரொலி : மூடப்பட்டது நித்தியானந்தா ஆசிரமம்

அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து குஜராத்தில் இருந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது.
x
அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து குஜராத்தில் இருந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா தன் மகள்கள் 2 பேரை நித்தியானந்தா தன் வசப்படுத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். பெங்களூரு ஆசிரமத்தில் இருந்த தன் மகள்கள், குஜராத்தில் உள்ள அகமதாபாத் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நித்தியானந்தா ஆசிரமம் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் அகமதாபாத்தில் இருந்த நித்தியானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து இங்கிருந்த பக்தர்கள் அனைவரும் பெங்களூரு பிடதி ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்