இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை, மத்திய அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை, மத்திய அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார்
x
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.  இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தபோது, இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த கோத்தபய ராஜபக்சேவை, டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். தனது பயணத்தின் போது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து கோத்தபய ராஜபக்சே ஆலோசனை நடத்த உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்