நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா? : மனைவியை குத்திக்கொன்ற இந்தியர் தூக்கிட்டு தற்கொலை

நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருந்த ஆத்திரத்தில் தனது மனைவியை இந்தியர் ஒருவர் குத்தி கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா? : மனைவியை குத்திக்கொன்ற இந்தியர் தூக்கிட்டு தற்கொலை
x
நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருந்த ஆத்திரத்தில் தனது மனைவியை இந்தியர் ஒருவர் குத்தி கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் வசித்து வந்த இந்திய தம்பதி தினேஷ்வர் பத்திதாட் , டோனி டோஜோய்.  இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம்தான் திருமணம் நடைபெறுள்ளது. டோஜோய், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை என்றும், எந்த நேரமும் அவரது பாடல்களை மட்டுமே கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தம்பதிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவி தன்னை விட நடிகர் ஹிருத்திக் ரோஷனை அதிகம் விரும்பியதால் தினேஷ்வர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, தினேஷ்வர் தமது மனைவி டோஜோயை கத்தியால் குத்தி கொலை செய்தார். 

பின்னர் அவர் டோஜோயின் மூத்த சகோதரிக்கு போன் செய்து, கொலை செய்த விவரத்தை சொல்லிவிட்டு,  வீட்டருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததுடன், இது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். ரசிகையாக இருப்பதில் நீடித்த வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்