மாவோயிஸ்ட்டுகள் அச்சுறுத்தல் - சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் அச்சுறுத்தல் - சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு
x
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16 ம் தேதி திறக்கப்பட்டு 17ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற உள்ளன. இதையடுத்து சபரிமலை கோயிலுக்கு கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை காலத்தில் 23 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட உள்ளனர். பக்தர்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்