தெலுங்கானாவில் 7 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல்...

தெலங்கானா மாநிலத்தில் கள்ள நோட்டு கும்பலை கைது செய்த போலீசார் 7 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானாவில் 7 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல்...
x
தெலங்கானா மாநிலத்தில் கள்ள நோட்டு கும்பலை கைது செய்த போலீசார் 7 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்து பள்ளி நகரில் பதுங்கிருந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த 5 பேரை  தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  அந்த கும்பல் தங்கியிருந்த வீட்டில் மறைத்து வைக்கட்டிருந்த 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 7 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், அந்த கும்பலிடம் ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் தெலங்கானா போலீசார் கமிஷன் அடிப்படையில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்த கும்பலை  சேர்ந்த 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்