ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு
x
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளில் வரும் 30-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 7ஆம் தேதி, 20 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. தொடர்ந்து, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதியன்று 17 தொகுதிகளிலும், நான்காம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 16ஆம் தேதி 15 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20-ஆம் தேதி 16 தொகுதிகளில் நடைபெற உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்