மகாத்மா காந்தி 150- பிறந்த நாள் கொண்டாட்டம் - டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி

காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் யினர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
மகாத்மா காந்தி 150- பிறந்த நாள் கொண்டாட்டம் - டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி
x
காந்தியின் 150-வது பிறந்த நா​ளை ஓராண்டு கொண்டாட காங்கிரஸ் க​ட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரு வாரம் பேரணிகள் நடத்த முடிவு செய்து இன்று தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் அக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் தொடங்கிய காந்தி சந்தேஸ் யாத்திரா, ராஜ்காட்டில் நிறைவடைகிறது. ராகுல்காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கானோர்  இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். காந்தியின் நினைவுகளை போற்றவும், அவருடைய கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும் இந்த பேரணிகள் நடத்தப்படுவதாகவும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்த பேரணிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்