நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்
x
தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்ட உள்ளதாக 'இஸ்ரோ', வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளது. சந்திரயான் 2 திட்டத்தில், 90 முதல் 95 சதவிகித பணிகள் நிறைவடைந்ததாகவும், முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான்- 2 திட்டத்தில் மிகப் பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து, ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகள் உற்று நோக்கி கொண்டு இருந்ததாகவும், இஸ்ரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் திட்டமிட்டபடி ஆர்பிட்டர்  சுற்றிக் கொண்டு இருப்பதால, அதன் மூலம், நிலவை ஆய்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்