70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு?

செலவுகளை குறைப்பதற்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள், பாதி பேருக்கு மேல் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு?
x
செலவுகளை குறைப்பதற்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள், பாதி பேருக்கு மேல் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன்குமார் பர்வார், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தெரிவித்தார். எனவே, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஊழியர்கள், பணியில் இருப்பார்கள் என்றும், தேவைப்பட்டால், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் பிரவீன்குமார் பர்வார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்