டி.கே. சிவக்குமார் கைது பழிவாங்கும் நடவடிக்கை - ராகுல்காந்தி

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டி.கே. சிவக்குமார் கைது பழிவாங்கும் நடவடிக்கை - ராகுல்காந்தி
x
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு இது மற்றொரு உதாரணம் என கூறியுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி, தனி நபரை குறிவைக்கும் போக்கு, கண்டனத்திற்குரியது என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்