பெண்ணிடம் பர்ஸை திருடிய கில்லாடி பெண் கைது : பெண்ணின் அஜாக்கிரதையால் நடந்த சம்பவம்

ஏடிஎம் கார்டில் பின் நம்ரை எழுதி வைத்ததால், 24 ஆயிரம் ரூபாயை பெண் ஒருவர் பறிகொடுத்த சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.
பெண்ணிடம் பர்ஸை திருடிய கில்லாடி பெண் கைது : பெண்ணின் அஜாக்கிரதையால் நடந்த சம்பவம்
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து பேருந்தில் வந்த மீரா என்ற பெண்ணை நோட்டமிட்டு வந்த  பெண் ஒருவர் அவரது பர்ஸை நூதனமான முறையில் திருடிச் சென்றார். பின்னர் அந்த பர்ஸில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்ட அந்த பெண், ஏடிஎம் கார்டில் பின் நம்பர் எழுதியிருப்பதை பார்த்துள்ளார். இதைப் பார்த்ததும் அந்த பெண் அந்த ஏடிஎம் கார்டை எடுத்துக் கொண்டு தட்டாஞ்சாவடியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று 24 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பணம் எடுக்கப்பட்ட தகவல் மீராவுக்கு குறுந்தகவல் மூலம் வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வங்கி ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் பணத்தை திருடிய தேன்மொழி என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. ஏடிஎம் கார்டில் பின் நம்பரை குறிப்பிடக் கூடாது என வங்கிகள் அறிவுறுத்தியும், சிலர் இது போல் செய்வதால் பணத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகிறது.

Next Story

மேலும் செய்திகள்