கஞ்சா புகைப்பதை காட்டி கொடுத்த‌தால் ஆத்திரம் : புதுச்சேரியில் சாமியார் படுகொலை

கஞ்சா அடித்த‌தை காட்டி கொடுத்த‌தால் சாமியார் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா புகைப்பதை காட்டி கொடுத்த‌தால் ஆத்திரம் : புதுச்சேரியில் சாமியார் படுகொலை
x
புதுச்சேரி பாலாஜிநகர் மொட்டை தோப்பு பகுதியில் த‌த்துவானந்தா என்ற சாமியார் தனது வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார், அதே பகுதியை சேர்ந்த விக்கி, சிவா என இரு இளைஞர்களை கைது செய்தனர். இருவரும் சாமியாரின் குடியிருப்புக்கு எதிரே கஞ்சா புகைப்பதை வழக்கமாக கொண்டிருந்த‌தாக தெரிகிறது. இதனை அவ்வ‌ப்போது கண்டித்து வந்த சாமியார் த‌த்துவானந்தா, போலீசாரிடமும் காட்டி கொடுத்த‌துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரது வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த கத்திரிக்கோலால் சாமியாரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். சிவா, விக்கியிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்றுகொண்ட போலீசார், ரத்த கரை படிந்த அவர்களது உடைகளையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்