கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு
x
கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரண்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனகல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிக நீர்வரத்து காரணமாக பாதுகாப்பு வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் சேதடைந்தன. இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மீண்டும் அதிக நீர் வர தொடங்கியுள்ளதால் மறுகட்டமைப்பு  பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்