புதுச்சேரி அருகே பேருந்துகள் பக்கவாட்டில் உரசி விபத்து - காயமடைந்த 25 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

புதுச்சேரி அருகே தனியார் பேருந்துகள் பக்கவாட்டில் மோதிக் கொண்ட விபத்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி அருகே பேருந்துகள் பக்கவாட்டில் உரசி விபத்து - காயமடைந்த 25 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
x
புதுச்சேரி அருகே தனியார் பேருந்துகள் பக்கவாட்டில் மோதிக் கொண்ட விபத்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி இரவு சென்ற தனியார் பேருந்தும், கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பேருந்தும் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் பக்கவாட்டில் மோதிக் கொண்டது. இதில் பேருந்து ஓட்டுனர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்