அரசு சார்பில் ராஜீவ் சிலைக்கு மரியாதை : முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர், சர்வமத பிரார்த்தனைகள் செய்யப்பட்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகில் வாஸ்னிக், தேசிய செயலாளர் சஞ்சய் தத் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story