உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது.
x
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது. இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணையை முடிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரம் அவகாசம் வழங்குமாறு சிபிஐ கேட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வழக்கறிஞருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

Next Story

மேலும் செய்திகள்