கேரளா நிவாரண முகாமில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போக இருந்த நிலையில், கிராம மக்களின் உதவியால் நிவாரண முகாமில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
கேரளா நிவாரண முகாமில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்
x
கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போக இருந்த நிலையில், கிராம மக்களின் உதவியால் நிவாரண முகாமில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. வயநாட்டில் உள்ள சூரல்மலை பகுதியை சேர்ந்த ராபியா என்ற பெண்ணுக்கு, ஆகஸ்ட் 18ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் திருமணம் நடத்த முடியாத சூழலில் இருந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள், ராபியாவின் திருமணத்தை தங்கள் வீட்டு திருமணமாக எண்ணி, பொருளாதார உதவியோடு நிவாரண முகாமிலேயே திருமணத்தை செய்து வைத்தனர். இந்த நிகழ்வு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்