உலக மக்கள் தொகை:"2027-ல் இந்தியா முதலிடம் பிடிக்கும்"- ஐ.நா.சபை கணிப்பு

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2027-ல் முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை:2027-ல் இந்தியா முதலிடம் பிடிக்கும்- ஐ.நா.சபை கணிப்பு
x
138 கோடி மக்கள் தொகையுடன் சீனா, உலகின் முதல் நாடாக இருந்து வருகிறது. 2 - வது இடம் பிடித்துள்ள இந்தியாவில், 133 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயருவதால், 2027 - ல் இந்தியா, முதல் நாடாக மாறும். அதேநேரம், 2065 க்கு பிறகு, இந்தியாவில் மக்கள் தொகை குறைய வாய்ப்பு உள்ளதாக ஐ. நா. கணித்துள்ளது.

உலக மக்கள் தொகையை பொறுத்தவரை, "டாப் டென் " நாடுகள் பட்டியலின் படி சீனா, இந்தியாவை தொடர்ந்து  அமெரிக்கா 3-வது இடம் வகிக்கிறது. 4-வது இடத்தில் இந்தோனேஷியாவும், 5- வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இந்த பட்டியலில், பாகிஸ்தான் 6-வது இடம் வகிக்கிறது. நைஜீரியா 7-வது இடம் வகிக்க, வங்கதேசம் 8-வது இடத்தில் உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில், 9-வது இடம் ரஷியாவுக்கும், 10-வது இடம்  மெக்சிகோவுக்கும் கிடைத்துள்ளது. இதனிடையே, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், இந்தியாவில் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் வட மாநிலங்களில் சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்