அணுவையும், மூலக்கூறுகளையும் கண்டுபிடித்தது சாரக் ரிஷி - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

அணுவையும் மூலக்கூறுகளை கண்டுபிடித்தது சாரக் என்ற ரிஷி என மனிதவள மேம்பாடு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
அணுவையும், மூலக்கூறுகளையும் கண்டுபிடித்தது சாரக் ரிஷி - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
x
அணுவையும், மூலக்கூறுகளை கண்டுபிடித்தது சாரக் என்ற ரிஷி என மனிதவள மேம்பாடு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். மும்பை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், எதிர்காலத்தில் நடக்கும் கணினியின் தகவல் பரிமாற்ற முறை என்பது, சமஸ்கிருதத்தால் மட்டுமே சாத்தியம் என நாசா கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். சமஸ்கிருதம் விஞ்ஞானப் பூர்வமான மொழி என்றும், அறிவியல் பூர்வமாக பேசுவதற்கு எளிய மொழி என்றும் நாசா கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அணு, மூலக்கூறு போன்ற கூறுகளை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தது யார் என கேள்வி எழுப்பும் ரமேஷ் பொக்ரியால், அவற்றை, சாரக் ரிஷி கண்டுபிடித்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்