இன்று கார்கில் வெற்றி தினம் : தாய் நாட்டை காக்க உயிர்நீத்த வீரர்களுக்கு மோடி புகழாரம்

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கு தனது இதயபூர்வமான மரியாதையை உரிதாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று கார்கில் வெற்றி தினம் : தாய் நாட்டை காக்க உயிர்நீத்த வீரர்களுக்கு மோடி புகழாரம்
x
தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கு தனது இதயபூர்வமான மரியாதையை உரிதாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த நாள் நமது வீரர்களின் தைரியம், துணிச்சல், அர்பணிப்பை எடுத்துக் காட்டும் நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாக்க உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கு தனது மரியாதையையும், அஞ்சலியை​யும் இந்த நேரத்தில் செலுத்துவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். கார்கில் போரின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் சென்று தைரியமான வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களோடு மக்கள் உள்ளதை தெரிவிக்கவும் கிடைத்த வாய்ப்பையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். ஜம்மு, காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேச கட்சி பொறுப்பாளராக இருந்த அந்த காலக்கட்டத்தில், வீரர்களை சந்தித்து உரையாட கிடைத்த அந்த தருண​ம் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்