விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் - வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி

விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
விரைவில் குல்பூஷன் ஜாதவ் பத்திரமாக நாடு திரும்புவார் - வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி
x
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசினார். நாடாளுமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு குல்பூஷன் ஜாதவ் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் துன்பகரமான நாட்களை எதிர்கொண்ட அவரது குடு​ம்பத்தினரின் மனஉறுதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்