மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் தெற்கு பகுதியான டோங்கிரியில் இன்று காலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் தெற்கு பகுதியான டோங்கிரியில் இன்று காலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் 40 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் அம்மாநில தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்துள்ளனர். தொடர் மழையால் கட்டடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
Next Story