"செங்கோட்டை-புனலூர் இடையே மின்சார ரயில் பாதை"

"அடுத்த மாதம் டெண்டர் அறிவிக்க ஏற்பாடுகள்" - மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்
செங்கோட்டை-புனலூர் இடையே மின்சார ரயில் பாதை
x
நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கேரள மாநிலம் புனலூர் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் தயாராகி வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்காக 79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார். 2019-20 ஆம் ஆண்டில் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கான  ரயில் பாதையை மின்மயமாக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் 
பியூஷ் கோயல்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்