6 நாட்கள் அடைத்து வைத்து சிறுமி பாலியல் துன்புறுத்தல் : காதலனை நம்பி சென்று ஏமாந்த சிறுமி

காதலனை நம்பி சென்ற 16 வயது சிறுமியை, அடைக்கலம் தருவதாக அழைத்து சென்ற நபர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 நாட்கள் அடைத்து வைத்து சிறுமி பாலியல் துன்புறுத்தல் : காதலனை நம்பி சென்று ஏமாந்த சிறுமி
x
ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும், ஓங்கோலை சேர்ந்த ராம் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோர் கண்டித்ததால், ராமின் அழைப்பின்படி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி ஓங்கோலுக்கு தனியே சென்றுள்ளார். 

காலையில் ஓங்கோல் பேருந்து நிலையம் சென்றடைந்த சிறுமி, மாலை வரை ராமை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இதனால் பேருந்து நிலையத்திலேயே அழுதபடி உட்கார்ந்திருந்த சிறுமியிடம் பாஜி என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பேச்சு கொடுத்து தனது நண்பன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் சிறுமியை அடைத்து வைத்து பாஜியும் அவரின் நண்பர் ஆகாஷும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு நிறுத்தாத  ஆகாஷும், பாஜியும் பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் அந்த சிறுமியை பற்றி தெரிவித்து அவர்களது அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை நான்கு நாட்கள் அடைத்து வைத்து நான்கு மாணவர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். 

அங்கிருந்து தப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை போலீஸிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, மாற்றுத்திறனாளி பாஜி, ஆகாஷ் மற்றும் இரண்டு பொறியியல் மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வரும் போலீசார் சிறுமியை வரவழைத்த ராமையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இளம்பருவத்தில் பாலின கவர்ச்சியல் ஏற்படும் காதலை நம்பி, பெற்றோரின் பேச்சை கேட்காமல் வெளியேறும் சிறுமிகளுக்கு நேரும் கொடுமை குறித்து காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.  காதலனை நம்பி ஏமாந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்