ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை : பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தரம்தோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை : பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தரம்தோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதால் பாதுகாப்பு படையினர்  பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை 
பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் கூடுதல்  வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்