கேரளாவில் வழக்கத்தை விட மழை பொழிவு குறைவு - வானிலை ஆய்வில் தகவல்

கேரளாவில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், இடுக்கி மாவட்ட பகுதிகளில் மழை பொழிவு குறைந்துள்ளது.
கேரளாவில் வழக்கத்தை விட மழை பொழிவு குறைவு - வானிலை ஆய்வில் தகவல்
x
கேரளாவில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், இடுக்கி மாவட்ட பகுதிகளில் மழை பொழிவு குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், இடுக்கி மாவட்டம் மூணாறில் ஜுன் மாதம் முதல் வாரத்தில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழப்புழா, கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலும் வழக்கத்தை விட மழை அளவு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மழை காலம் தொடங்கியுள்ளதால், இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்