காணாமல் போன ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன...

அருணாச்சல பிரதேச மாநிலம், லிபோ பகுதியில் காணாமல் போன ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன...
x
கடந்த 3 ஆம் தேதி, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் அசாம் மாநிலம் ஜோர்கார்ட் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் 13 பேருடன் அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. விமானம் கிளம்பிய அரை மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி பணியில், இந்திய ​விமானப்படை, மற்றும் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், லிபோ பகுதியில், ​இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது, உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ஏ.என். 32 விமானத்திற்கு சொந்தமானது என இந்திய விமானப்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்