ரசமா...சாம்பாரா...? - கேள்வி எழுப்பிய எம்எல்ஏ
கோடை விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பாகூர் அரசுப் பள்ளியில் எம்எல்ஏ தனவேலு சோதனை மேற்கொண்டார்.
கோடை விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பாகூர் அரசுப் பள்ளியில் எம்எல்ஏ தனவேலு சோதனை மேற்கொண்டார். இலவச பாட, புத்தகங்களை வழங்கிய பின் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மதிய உணவை அவர் ஆய்வு செய்தார். அப்போது சாம்பாரை ருசி பார்த்த எம்எல்ஏ, இது சாம்பாரா இல்லை ரசமா? என கேள்வி எழுப்பினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாகவும், சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Next Story